
இந்தியா-ஆஸ்திரேலியா இடையான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது. இரு அணிகளும் அதிதீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக கடைசி மூன்று டெஸ்ட் தொடரிலும் விராட் கோலி எதிர்பார்த்தவாறு செயல்படவில்லை குறிப்பாக அவரது தரத்திற்கு நிகராக இல்லை என்று விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.
அத்துடன் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக டெஸ்ட் தொடரில் சதம் அடிக்காமல் தவித்து வருகிறார். அந்த குறையையும் தீர்ப்பதற்கு இந்த டெஸ்ட் தொடரை விராட் கோலி பயன்படுத்தியாக வேண்டும் என்கிற கட்டாயத்திலும் இருக்கிறார். ஆஸ்திரேலியா அணியும் 19 வருடங்களாக இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியாமல் தவித்து வருகிறது.
கடைசியாக 2004ஆம் ஆண்டு வென்றது குறிப்பிடத்தக்கது. இம்முறை அந்த குறையை தீர்ப்பதற்கு ஆஸ்திரேலியா அணியும் முனைப்பில் இருப்பதால் இரு தரப்பில் இருந்தும் மிக சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.