
அஹ்மதாபாத்தில் நடைபெற்ற முடிந்த ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியானது ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரசிகர்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இருந்தாலும் இந்த தொடரின் இறுதிப்போட்டியை தவிர்த்து இந்திய அணி விளையாடிய பத்து ஆட்டங்களிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருந்தது. குறிப்பாக ரோஹித் சர்மா இந்த தொடரில் 597 ரன்கள் குவித்து கோலிக்கு அடுத்து இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்து வீரராக தனது பெயரை பதிவு செய்தார். அதோடு இறுதி போட்டியிலும் 31 பந்துகளை சந்தித்த அவர் 47 ரன்கள் சேர்த்து அதிரடியான தொடக்கத்தை அளித்தார்.
இருப்பினும் இந்திய அணியின் பேட்டிங் சரிவு மற்றும் ஆஸ்திரேலியா அணியின் ஆதிக்கம் ஆகியவை காரணமாக இந்த போட்டியை இந்திய அணி இழந்தது. இந்நிலையில் இந்த இறுதிப் போட்டி முடிந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட், ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மற்றும் பேட்டிங் குறித்த தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.