eng vs pak
அடுத்தடுத்து கேட்ச்சுகளை விட்ட ஆசாம் கான்; களத்தில் கத்திய ஹாரிஸ் ராவுஃப்!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியானது லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது அதிரடியாக தொடங்கினாலும், அதன்பின் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் பாகிஸ்தான் அணியானது 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக உஸ்மான் கான் 38 ரன்களையும், பாபர் ஆசாம் 36 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஆதில் ரஷித், லியாம் லிவிங்ஸ்டோன், மார்க் வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
Advertisement