Advertisement
Advertisement

ind vs ban

ஹர்திக் பாண்டியா தான் எங்கள் அணியின் முக்கிய வீரர் - ரோஹித் சர்மா பாராட்டு!
Image Source: Google
Advertisement

ஹர்திக் பாண்டியா தான் எங்கள் அணியின் முக்கிய வீரர் - ரோஹித் சர்மா பாராட்டு!

By Bharathi Kannan June 23, 2024 • 09:52 AM View: 70

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று போட்டி நேற்று ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இதில், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ஹர்திக் பாண்டியாவின் அரைசதத்தின் மூலமும், மற்ற பேட்டர்களின் ஒத்துழைப்பின் மூலமாகவும் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 50 ரன்களைச் சேர்த்தார். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியானது இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டுமே சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 40 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Advertisement

Related Cricket News on ind vs ban

Advertisement