Icc t20 world cup 2022
சூர்யகுமார் யாதவிற்கு பந்துவீச கஷ்டப்பட்டோம் - பால் வான் மீகெரென்
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 23ஆவது போட்டியில் இந்திய அணியும், நெதர்லாந்து அணியும் மோதின. ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 179 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி 62* ரன்களும், ரோஹித் சர்மா 53 ரன்களும், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 51 ரன்களும் எடுத்தனர்.