Advertisement
Advertisement

Matheesha pathirana latest news

மீண்டும் நாடு திரும்பிய பதிரனா; சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி!
Image Source: Google

மீண்டும் நாடு திரும்பிய பதிரனா; சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

By Bharathi Kannan May 05, 2024 • 16:28 PM View: 136

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுபாக நடைபெற்றுவருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் இன்று நடைபெற்றுவரும் முக்கியமான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 

தரம்சாலாவில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிஎஸ்கே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அஜிங்கியா ரஹானே 9 ரன்களிலும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன்களிலும், ஷிவம் தூபே ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்துள்ளனர். 

Related Cricket News on Matheesha pathirana latest news