Advertisement
Advertisement
Advertisement

The world cup

நேபாளம் கூட பாபர் ஆசாமை அணியில் சேர்க்காது: சோயப் மாலிக் கடுமையான தாக்கு!
Image Source: Google
Advertisement

நேபாளம் கூட பாபர் ஆசாமை அணியில் சேர்க்காது: சோயப் மாலிக் கடுமையான தாக்கு!

By Bharathi Kannan July 02, 2024 • 15:33 PM View: 154

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது இறுதிப்போட்டியில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

அதேசமயம் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் என கணிக்கப்பட்ட அணிகளில் ஒன்று பாகிஸ்தான் அணி. அந்தவகையில் பாபர் ஆசாம் தலைமையில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியானது லீக் சுற்று போட்டிகளில் அமெரிக்கா மற்றும் இந்திய அணியிடம் அடைந்த படுதோல்வியின் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றுடனே நடையைக் கட்டியது. 

Advertisement

Related Cricket News on The world cup