Advertisement
Advertisement

chennai super kings

தோனி தனது ஓய்வு முடிவு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை - காசி விஸ்வநாதன்!
Image Source: Google

தோனி தனது ஓய்வு முடிவு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை - காசி விஸ்வநாதன்!

By Bharathi Kannan May 20, 2024 • 14:12 PM View: 67

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதேசமயம் இத்தொடரில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் விளையாடிய 14 போட்டிகளில் 7 வெற்றி, 7 தோல்விகளைச் சந்தித்து ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. 

முன்னதாக ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 13 சீசன்கள் வழிநடத்திய மகேந்திர சிங் தோனி, அதில் 5 முறை கோப்பையை வென்று கொடுத்து அசத்தினார். இந்நிலையில் தற்சமயம் 42 வயதை எட்டியுள்ள தோனி நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியது, இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேப்டன் பதவியை வழங்கி இருந்தார். 

Related Cricket News on chennai super kings