Australian cricket team
கிளர்க் உடனான நட்பு முறிவுக்கு ஐபிஎல் தான் காரணம் - ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்!
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க், கடந்த 2015ஆம் ஆண்டு 'ஆஷஸ் டைரி 15 'என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளியிட்டிருந்தார். அதில் அவர் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த முன்னாள் வீரர்கள் பலரையும் விமர்சித்திருந்தார்.
ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்-ரவுண்டரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் குறித்து மைக்கேல் கிளார்க் தனது புத்தகத்தில், ''அணிக்கு பெரியதாக எதுவும் சாதிக்காமல், சைமன்ட்ஸ் குடித்து விட்டு கும்மாளம் போட்டவர். இப்படி தரம் தாழ்ந்த ஒருவர் மற்றொருவரை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லாதவர்'' என கடுமையான வார்த்தைகளால் குறிப்பிட்டிருந்தது அச்சமயத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.