Indian team
உச்சகட்ட ஃபார்மில் ரிஷப் பந்த்; அதிரடி ஆட்டத்தை வெளிப்பத்திய சுப்மன் கில்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஜூன் 18ஆம் தேதி சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த வாரம் இங்கிலாந்து சென்றடைந்து, தனிமைப்படுத்த பட்டது.
இந்நிலையில் தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்துள்ள இந்திய அணி வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றனர். அதன்படி விராட் கோலி தலைமையில் ஒரு அணியும், அஜிங்கியா ரஹானே தலைமையில் ஒரு அணியும் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டது.