Advertisement
Advertisement

Mi vs rcb

ஐபிஎல் 2024: பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் கனவைத் தகர்த்தது ஆர்சிபி !
Image Source: Google

ஐபிஎல் 2024: பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் கனவைத் தகர்த்தது ஆர்சிபி !

By Bharathi Kannan May 09, 2024 • 23:45 PM View: 89

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹிமாச்சல் பிரதேசம் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஃபாஃப் டூ பிளெசிஸும், 12 ரன்கள் எடுத்திருந்த வில் ஜெக்ஸும் அடுத்தடுத்து அறிமுக வீரர் வித்வாத் கவெரப்பா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். இதனால் ஆர்சிபி அணி 43 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் விராட் கோலியுடன் இணைந்த ராஜத் பட்டிதார் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி சிக்ஸர்களை விளாசித்தள்ளினார். அவருக்கு துணையாக விராட் கோலியும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். 

Related Cricket News on Mi vs rcb