Ravichandran ashwin
கிரிக்கெட்டில் இந்த விதிமுறையையும் கொண்டு வர வேண்டும் - அஸ்வின்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் நேத்தன் லயன் ஃபீல்டிங் செய்து கொண்டிருக்கும்பொழுது காயம் ஏற்பட்டு போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். நடக்கவே முடியாத சூழலிலும் கடைசியில் வந்து பேட்டிங் இறங்கினார்.
இது இங்கிலாந்து அணிக்கு அட்வான்டேஜ் கிடைத்தது போல ஆகிவிட்டது. ஏனெனில் பந்து வீச்சிலும் நேத்தன் லயன் தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. பேட்டிங்கில் பங்களிப்பை கொடுக்கக்கூடியவர். ஆனால் செய்ய முடியவில்லை. இந்த ஒரு சூழலை கையாள்வதற்கு இரு அணிகளும் சமநிலையில் பலம் பெற்று விளையாடுவதற்கு புதுவிதமான விதிமுறைகளை கொண்டுவர வேண்டும் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.