Sa vs ind
கரோனா தொற்றால் வீராங்கனையின் தாய் உயிரிழப்பு; சோகத்தில் இந்திய அணி!
இந்தியாவில் கரோனா பரவல் 2வது அலை தனது கோர முகத்தை காட்டி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பது போல் உயிரிழப்பவர்களில் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை பிரியா புனியாவின் தாய் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.