Sl vs wi 1st test
இரண்டு ஆண்டுகளாக நான் இதைத்தான் செய்துவந்தேன் - கேஎல் ராகுல்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ராகுல் தொடக்க வீரராக மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கே.எல் ராகுல் ஆரம்பத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் அதன்பிறகு ஃபார்ம் அவுட் காரணமாக டெஸ்ட் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேறியதற்கு பின்னர் மாயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா, கில் போன்ற பல வீரர்கள் துவக்க வீரருக்கான இடத்திற்கு வந்ததால் மீண்டும் தனது இடத்தை பிடிக்க கடுமையாக போராடி வந்தார்.