With t20
மகளிர் ஆசிய கோப்பை 2024: மந்தனா, ஷஃபாலி அதிரடியில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று முதல் இலங்கையில் தொடங்கியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது தம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானம் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் குல் ஃபெரோசா - முனீபா அலி இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் குல் ஃபெரோசா 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 11 ரன்களை எடுத்த நிலையில் முனீபா அலியும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய சித்ரா அமீன் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாட, மறுமுனையில் களமிறங்கிய ஆலியா ரியாஸ் 6 ரன்களிலும், கேப்டன் நிதா தார் 8 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சித்ரா அமீன் 25 ரன்கள் சேர்த்த நிலையில் அட்டமிழந்தார்.
Related Cricket News on With t20
-
T20 Blast 2024: சதமடித்து மிரட்டிய சாம் கரண்; ஹாம்ப்ஷயரை வீழ்த்தி சர்ரே அபார வெற்றி!
ஹாம்ப்ஷயர் அணிக்கு எதிரான டி20 பிளாஸ்ட் ஆட்டத்தில் சர்ரே அணியின் நட்சத்திர வீரர் சாம் கரண் சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். ...
-
இணையத்தில் வைரலாகும் ஹர்திக் பாண்டியாவின் இன்ஸ்டாகிராம் பதிவு!
2023 உலகக் கோப்பை தொடரில் காயம் காரணமாக வெளியேறிய போது எடுத்த புகைப்படத்தையும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பு எடுத்த புகைப்படத்தினையும் இணைந்து ஹர்திக் பாண்டியா பகிர்ந்துள்ள இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
அடுத்த உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் இடம்பிடிக்க மாட்டார் - அமித் மிஸ்ரா!
2026 டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என தான் நினைக்கவில்லை என முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா கூறிய கருத்துக்கு ரசிகர்கள் தங்கள் பதிலடியை கொடுத்து வருகின்றனர். ...
-
ஐபிஎல் தொடர் இந்திய கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தியுள்ளது - ஷிவம் தூபே!
ஐபிஎல் தொடரின் போட்டி சூழல் இந்திய கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தியுள்ளது. மேலும் அது இன்று சர்வதேச அரங்கில் நாம் காணும் வெற்றிக்கு பங்களிக்கிறது என இந்திய வீரர் ஷிவம் தூபே தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 தரவரிசை: டாப்-10இல் நுழைந்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
ICC Women's T20 Ranking: ஹர்மன்ப்ரீத், ஷஃபாலி வெர்மா, தீப்தி சர்மா முன்னேற்றம்!
சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது இன்று வெளியிட்டுள்ளது. ...
-
வதேதராவில் ஹர்திக் பாண்டியாவிற்கு உற்சாக வரவேற்பளித்த ரசிகர்கள் - வைரலாகும் காணொளி!
டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணியின் துணைக்கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவிற்கு அவரது சொந்த ஊரானா வதேதராவில் ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை வழங்கினர். ...
-
இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் வநிந்து ஹசரங்கா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியைத் தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக வநிந்து ஹசரங்கா அறிவித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 தரவரிசை: டாப்-10இல் நுழைந்தார் ருதுராஜ் கெய்க்வாட்!
ஐசிசி ஆடவர் டி20 பேட்டர்களுக்கான தவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ருதுராஜ் கெய்க்வாட் 13 இடங்கள் முன்னேறி 07ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
இந்திய அணிக்கு வழங்கப்பட்ட ரூ.125 கோடி பரிசுத்தொகை; யாருக்கு எவ்வளவு தொகை வழங்கப்படும்?
உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ தரப்பில் வழங்கப்பட்ட ரூ.125 கோடி பரிசுத்தொகையில், யார் யாருக்கு எவ்வளவு பணம் பகிர்ந்தளிக்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளன. ...
-
இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளராக ஜெயசூர்யா நியமனம்!
இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக பயிற்சியாளராக முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவை நியமிப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஹைதராபாத்தில் முகமது சிராஜுக்கு உற்சாக வரவேற்பு - வைரலாகும் காணொளி!
டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு அவரது சொந்த ஊரில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்துள்ளனர். ...
-
இந்திய அணியை பாரட்டிய பிரதமருக்கு நன்றி தெரிவித்த ஜெய் ஷா!
இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மா, சூர்யா, துபே, ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு மஹாராஷ்டிரா அரசு தரப்பில் பாராட்டு விழா!
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்த மும்பைச் சேர்ந்த ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் தூபே மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை மஹாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47