2023
ரஞ்சி கோப்பை 2024: அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷர்துல் தாக்கூர்; சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் முக்கியமான தொடராக பார்க்கப்படும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் எலைட் குரூப் பி பிரிவுக்கான ஆட்டம் ஒன்று மும்பை மற்றும் அசாம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அசாம் அணி வீரர்கள் ஷர்துல் தாக்கூரின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அந்த அணியில் அதிகபட்சமாக அபிஷேக் தாக்கூரி 31 ரன்களைச் சேர்த்ததை தவிற மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதிலும் குறிப்பாக அந்த அணியின் 7 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு நடையைக் கட்டினர்.
Advertisement
Related Cricket News on 2023
கிரிக்கெட் உடனுக்குடன்
அதிகம் பார்க்கப்பட்டவை
இன்றைய கிரிக்கெட் கேலரி
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24