Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Arshdeep singh

தனிப்பட்ட காரணத்தினால் வீடு திரும்பிய தீபக் சஹார்!
Image Source: Google

தனிப்பட்ட காரணத்தினால் வீடு திரும்பிய தீபக் சஹார்!

By Bharathi Kannan December 03, 2023 • 19:49 PM View: 191

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5வது டி20 போட்டியில் பெங்களூரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மேத்யூ வேட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி தரப்பில் கிறிஸ் க்ரீன் நீக்கப்பட்டு, நேதன் எல்லீஸ் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் இந்திய அணியின் தீபக் சஹார் நீக்கப்பட்டு அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.

முகேஷ் குமார் திருமணம் காரணமாக திடீரென விடுப்பு எடுத்ததை தொடர்ந்து இந்திய அணியின் இளம் வீரர் தீபக் சஹார் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முன்பாக தீபக் சஹார் விஜய் ஹசாரே தொடரில் குஜராத் அணிக்கு எதிரான ஒரே போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். பவுலிங் ஃபார்ம் மற்றும் ஃபிட்னஸை நிரூபித்ததன் காரணமாக, தீபக் சஹர் உடனடியாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

Related Cricket News on Arshdeep singh