India vs australia
ஆடுகளம் ஒன்றும் விளையாடுவதற்கு கடினமாக இல்லை - கேஎஸ் பரத்!
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டும் தற்போது 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரண்டு டெஸ்டுகளில் பலத்த தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா ஏற்கனவே பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இழந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் ஒன்றாம் தேதி இந்தூரில் நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ரிஷப் பன்ட் இல்லாததால் கே எஸ் பரத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. முதல் இரண்டு இன்னிங்ஸில் பெரிய அளவில் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை.