Ipl 2023 final
இறுதிப்போட்டி நிச்சயம் பார்ப்பதற்கு விறுவிறுப்பாக அமையும் - சச்சின் டெண்டுல்கர்!
ஐபிஎல் 2023 சாம்பியன் யாா் என்பதற்கான பலப்பரிட்சையில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. அகமதாபாதின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த இறுதி ஆட்டம் மழையால் தாமதமாக தொடங்க வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி குறித்து முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், “இந்த சீசனில் ஷுப்மன் கில், செயல்பாடு மறக்க முடியாத அளவுக்கு சிறப்பாக அவருக்கு அமைந்திருக்கிறது. அதுவும் அவர் கடைசியாக அடித்த இரண்டு சதம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு சதம் மும்பையின் ஃபைனல் கனவை தகர்த்து விட்டது. மற்றொரு சதமும் எதிரணியின் வெற்றி வாய்ப்பை நசுக்கிவிட்டது. டி20 கிரிக்கெட்டில் இயற்கையே இதுதான். நாம் எதையும் கணிக்க முடியாது.