Sunil gavaskar
ரிஷப் பந்திற்கு மன்னிப்பே கிடையாது - சுனில் கவாஸ்கர் காட்டம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இந்திய வீரர்கள் புஜாரா ரஹானாவும் அரை சதங்கள் எடுத்த நிலையில் இந்திய அணி 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இன்று, ரிஷப் பந்த் ரன் எதுவும் எடுக்காத நிலையில் ரபாடாவின் பந்தை முன்னேறி வந்து அடிக்க முயன்று விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.