T natarajan
ஐபிஎல் தொடரில் ரசிகர்களை அனுமதித்ததால் கரோனா பரவவில்லை - பிசிசிஐ தரப்பில் விளக்கம்!
ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியில் விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவர் 10 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். நடராஜனுடன் தொடர்பில் இருந்த சக வீரர் விஜய் சங்கர், விஜய் குமார் (அணி மேலாளர்), ஷ்யாம் சுந்தர் (பிசியோதெரபிஸ்ட்), அஞ்சனா வன்னா (மருத்துவர்), துஷார் கேத்கர் (லாஜிஸ்டிக்ஸ் மேலாளர்), வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளர் பி. கணேசன் ஆகியோரும் முன்னெச்சரிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் தொடங்கும் முன்பு நடராஜனுக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அனைத்து வீரர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் கரோனா இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து இப்போட்டி திட்டமிட்டபடி நடைபெற்றது. இதி டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.