Tamil cricket news
ENG vs IND, 1st T20I: ஒரு சறுக்கலை சந்தித்தாலும் நாங்கள் பலமாக திரும்பவும் - ஜோஸ் பட்லர்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நேற்று சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெடுகளை இழந்து 198 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக பேட்டிங்கில் அனைவரும் அசத்த 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. சமீப காலமாகவே டி20 போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணியானது இந்த சேசிங்கை கடினமாக கொண்டு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்திய அணி பந்துவீச்சாளர்களின் அபார பவுலிங்கை தாக்கு பிடிக்க முடியாமல் 20 ஓவர்களை கூட முழுவதுமாக பேட்டிங் செய்யாமல் 19.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழுந்து 148 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
Related Cricket News on Tamil cricket news
கிரிக்கெட் உடனுக்குடன்
அதிகம் பார்க்கப்பட்டவை
இன்றைய கிரிக்கெட் கேலரி
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24