Tamil cricket news
ரிஷப் பந்த் இந்த அஸ்திரேலிய வீரர் போல வருவார் - சஞ்சய் பங்கர் நம்பிக்கை!
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2 – 2 என்ற கணக்கில் சமநிலையுடன் முடிந்துள்ளது. இத்தொடரில் முதலிரண்டு போட்டிகாளில் தோல்வியடிந்து ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்த இந்தியா அதற்காக அஞ்சாமல் விசாகப்பட்டினம் மற்றும் ராஜ்கோட்டில் நடைபெற்ற அடுத்த 2 போட்டிகளில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் துல்லியமாக செயல்பட்டு பெரிய வெற்றிகளை சுவைத்தது.
அதனால் சொந்த மண்ணில் எங்களை சாய்ப்பது அவ்வளவு சுலபமல்ல என்று தென் ஆப்பிரிக்காவுக்கும் காட்டிய இந்தியா தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்தது. அந்த நிலைமையில் இந்த தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கியமான 5ஆவது போட்டி நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. ஆனால் மழையால் 19 ஓவர்களாக குறைக்கப்பட்டு 7.50 மணிக்கு தொடங்கிய அப்போட்டியில் 28/2 என இந்தியா தடுமாறிக் கொண்டிருந்தபோது, வந்த மழை ஒரு மணி நேரம் அடித்து நொறுக்கியதால் இப்போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
Related Cricket News on Tamil cricket news
கிரிக்கெட் உடனுக்குடன்
அதிகம் பார்க்கப்பட்டவை
இன்றைய கிரிக்கெட் கேலரி
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24