Advertisement
Advertisement

Tamil cricket news

ஐபிஎல் 2024: ரிஷப் பந்த் விளையாட தடை; டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு பெரும் பின்னடைவு!
Image Source: Google

ஐபிஎல் 2024: ரிஷப் பந்த் விளையாட தடை; டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு பெரும் பின்னடைவு!

By Bharathi Kannan May 11, 2024 • 15:54 PM View: 72

ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 62ஆவது லீக் போட்டியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து, ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியானது இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். 

அதுமட்டுமில்லாமல் இரு அணிகளுக்கும் இது மிகவும் மிக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் தலா 6 வெற்றி, 6 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் 5ஆம் இடத்தில் நீடித்து வருகிறது. இதனால் அந்த அணி எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற கட்டாயத்தில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.

Related Cricket News on Tamil cricket news