Tamil cricket news
குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்துள்ளோம் - ஷுப்மன் கில்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. அதன்படி நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 231 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 104 ரன்களையும், சாய் சுதர்ஷன் 103 ரன்களையும் சேர்த்தனர். சிஎஸ்கே அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டேரிம் மிட்செல், மொயீன் அலி இணை அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தாலும், மற்ற வீரகள் சோபிக்க தவறினர்.