The board
இப்படியிருந்தால், ஆட்டம் கைவிடப்பட வேண்டிய நிலைதான் வரும் - சுனில் கவாஸ்கர் காட்டம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் டி20 தொடர் தொடங்கியுள்ளது. டர்பன் மைதானத்தில் நேற்று நடக்கவிருந்த முதல் டி20 போட்டி டாஸ் கூட போடப்படாமல் கனமழை தொடர்ந்து பெய்ததன் காரணமாக கைவிடப்பட்டது. இந்த போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்திருந்தன.
இதனால் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் பலரும் நீண்ட நேரம் மழை நிற்கும் என்று காத்திருந்தனர். ஆனால் கடைசி வரை மழை தொடர்ந்ததால், ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் முதல் போட்டியே மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால், அடுத்தடுத்து நடக்கும் போட்டிகளும் பாதிக்கப்படுமோ என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
Advertisement
Related Cricket News on The board
கிரிக்கெட் உடனுக்குடன்
அதிகம் பார்க்கப்பட்டவை
இன்றைய கிரிக்கெட் கேலரி
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24