World
இந்திய அணிக்கெதிராக விளையாடுவது என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது - ஆஜாஸ் படேல்!
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரும் ஜூஸ் 18 அன்று நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.
இப்போட்டிக்கான நியூசிலாந்து அணியில் நியூசிலாந்து வாழ் இந்தியரான ஆஜாஸ் படேல், இந்திய அணிக்கெதிராக களமிறங்கவுள்ளார். இந்நிலையில் இந்திய அணிக்கெதிராக களமிறங்க உள்ளது குறித்து ஆஜாஸ் படேல் இத்தருணம் தன்னை மெய்சிலிர்க்க வைப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஆஜாஸ் படேல் “உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் பிறந்த நாடான இந்தியாவுக்கு எதிராக இறுதி போட்டியில் விளையாடுவது எண்ணி நான் மெய்சிலிர்க்கிறேன். நியூசிலாந்தில் குடியேறிய நான் அங்கிருந்துதான் எனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினேன். இப்போது கிரிக்கெட்டின் தாய் நாடான இங்கிலாந்தில் நான் பிறந்த நாட்டுடன், எனது தாய் நாடான நியூசிலாந்துக்கு அணிக்காக விளையாடுவது அற்புதமான அனுபவம்” என தெரிவித்துள்ளார்.
Related Cricket News on World
கிரிக்கெட் உடனுக்குடன்
அதிகம் பார்க்கப்பட்டவை
இன்றைய கிரிக்கெட் கேலரி
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24