ruturaj gaikwad
தோனியால் இன்னும் சில வருடங்கள் விளையாட முடியும் - மைக்கேல் ஹஸி நம்பிக்கை!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமாக தகழ்பவர் மகேந்திர சிங் தோனி. ஐபிஎல் தொடங்கியது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வந்த மகேந்திர சிங் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது கேப்டன் பதவியிலிருந்து விலகியதுடன், ருதுராஜ் கெய்க்வாட்டை புதிய கேப்டனாக அறிவித்தார். இதன் காரணமாக அவர் நடப்பு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவார் என்ற கருத்துக்கள் வெளியாகின.
மேலும் எஸ் எஸ் தோனி கடந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு பிறகு கூட தனது கடைசி போட்டி சென்னையில் தான் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார். அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் மற்றும் இறுதிப்போட்டியானது சென்னையில் நடைபெறவுள்ளது. மேலும் சிஎஸ்கே அணியும் அடுத்த போட்டியில் வெற்றிபெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும் என்பதால் சிஎஸ்கே ரசிகர்களும் தோனியின் கடைசி உரைக்காக காத்துள்ளனர்.