Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Bcci

காயமடைந்த வீரர்களின் உடற்தகுதி குறித்து அறிக்கை வெளியிட்ட பிசிசிஐ!
Image Source: Google

காயமடைந்த வீரர்களின் உடற்தகுதி குறித்து அறிக்கை வெளியிட்ட பிசிசிஐ!

By Bharathi Kannan July 21, 2023 • 23:33 PM View: 198

இந்திய அணி சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், கடந்த 10 வருடமாக ஐசிசி தொடர்களில் தோல்வியை சந்தித்து வருவது ரசிகர்களுக்கு புரியாத புதிராக இருந்து வருகிறது. இந்த தோல்விகளுக்கு சுமாரான பேட்டிங், பவுலிங் என்பதை தாண்டி முக்கிய வீரர்கள் காயத்தால் வெளியேறியது முதன்மை காரணமாக அமைந்தது. எடுத்துக்காட்டாக ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையை தொடர்ந்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியை பரிசளித்தது.

அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு வந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கார் விபத்தில் காயமடைந்து வெளியேறியது 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவிற்கு தோல்வியை கொடுத்தது. இதுபோக கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய முக்கிய வீரர்களும் முக்கிய ஐசிசி தொடர்களுக்கு முன்பாக காயமடைந்து வெளியேறியது இந்தியாவின் வெற்றிக்கு கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு முன்பாவது இவர்கள் திரும்பி வருவார்களா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Related Cricket News on Bcci