Border gavaskar trophy
இந்தியாவில் சுழற்பந்து வீச்சில் மட்டும் ஆபத்து இல்லை - அலெக்ஸ் கேரி எச்சரிக்கை!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி வரும் 9ஆம் தேதி நாக்பூரில் நடைபெறவுள்ளது.
இத்தொடருக்காக இரு அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் இந்தியவின் கிரிக்கெட் மைதானங்கள் குறித்தான விமர்சனங்கள் வலுக்க தொடங்கியுள்ளன. அத்துடன் ஆஸ்திரேலிய அணி பயிற்சி போட்டிகளையும் தவிர்துள்ளது விமர்சங்களுக்கு வித்திட்டது.