Covid 19
சஹாலின் பெற்றோருக்கு கரோனா - தனஸ்ரீ வர்மா!
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால். இந்நிலையில் இன்று இவரது பெற்றோர்களுக்கு கரோனா தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகவலை சஹாலின் மனைவி தனஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அப்பதிவில் “சாஹலின் தாயாருக்கு அறிகுறிகள் பெரிய அளவில் இல்லாததால் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவரது தந்தைக்கு அதிகப்படியான அறிகுறிகள் இருந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அனைவரும் தயவு செய்து வீட்டிலேயே இருங்கள், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்” என அப்பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.