For india
ஆசிய கோப்பை 2022: சூர்யகுமார் யாதவை பாராட்டிய ரோஹித் சர்மா!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தங்களது முதலாவது லீக் போட்டியில் பாகிஸ்தான அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது. அதற்கு அடுத்து நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் இரண்டாவது போட்டியில் ஹாங்காங் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஹாங்காங் அணி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தது.
அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 192 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 68 ரன்களும், விராட் கோலி 59 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஹாங்காங் அணியானது 20 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட் இழந்து 152 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அடுத்த சுற்றுக்கான தங்களது வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.
Related Cricket News on For india
-
சூர்யகுமாருக்கு தலைவணங்கிய கிங் கோலி!
ஆசிய கோப்பையில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக பேட்டிங் ஆடி 26 பந்தில் 68 ரன்களை குவித்த சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கை கண்டு வியந்துபோன விராட் கோலி, இன்னிங்ஸுக்கு பின் அவருக்கு தலைவணங்கினார். ...
-
ஆசிய கோப்பை 2022: கோலி, சூர்யா மிரட்டல்; ஹாங்காங்கை வீழ்த்தி சூப்பர் 4-ல் நுழைந்தது இந்தியா!
ஹாங்காங் அணிக்கெதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், சூப்பர் 4 சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
தோனி எனது வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டுள்ளார் - ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!
தனது வளர்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பெரும் பங்கு இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: வருங்காலத்தில் இவர் தோனியைப் போன்று வருவார் - ஹர்பஜன் சிங்!
ஹார்திக் பாண்டியாவின் இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங்கும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். ...
-
ஆசியா கோப்பை 2022: இந்தியா, பாகிஸ்தானுக்கு அபராதம்!
ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இரு அணிகளுமே பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட அதிகநேரம் எடுத்துக்கொண்டதால் இரு அணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
சூர்யகுமாருக்கு முன்னதான தன் களமிறங்கியது குறித்து ஜடேஜா ஓபன் டாக்!
ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவுக்கு முன் தன்னை இறக்கிவிட்டதற்கான காரணத்தை கூறியுள்ளார் ரவீந்திர ஜடேஜா. ...
-
ஆசிய கோப்பை 2022: இந்தியா vs ஆஸ்திரேலியா - உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. ...
-
ஆசிய கோப்பை 2022: இந்தியா vs ஹாங்காங் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா - ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ரசிகர்களின் மனதை கவர்ந்த நசீம் ஷா!
முதல் போட்டியிலேயே நாட்டுக்காக வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன் வலியுடன் பந்துவீசி கண்ணீருடன் வெளியேறிய நசீம் ஷாவுக்கு இந்திய ரசிகர்களும் பாராட்டு தெரிவிக்கின்றனர். ...
-
விராட் கோலி ஃபார்முக்கு திரும்ப வேண்டும் - ஹாங்காங் கேப்டன் விருப்பம்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என தாங்கள் விரும்புவதாக ஹாங்காங் அணியின் கேப்டன் நிசாகத் கான் தெரிவித்துள்ளார். ...
-
தோனியைஒ போன்று ஹர்திக் போட்டியை முடித்துள்ளார் - ராபின் உத்தப்பா!
தோனியை போன்று போட்டியை முடிக்க வேண்டும் என விரும்பிய ஹர்திக் பாண்டியா சிக்ஸருடன் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை முடித்து கொடுத்திருப்பார் என முன்னாள் இந்திய வீரரான ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். ...
-
இந்த பாகிஸ்தான் வீரர் நிச்சயம் அதிக தொகைக்கு ஏலம் போவார் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலின் மூலமாக பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த ஷாஹின் அஃப்ரிடியை பாராட்டி பேசி உள்ளார். ...
-
தற்போது உலகின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் பாண்டியா தான் - வாசிம் அக்ரம்
தற்போதைய கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் இந்திய அணியை சேர்ந்த ஹர்திக் பாண்டியா தான் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். ...
-
பாகிஸ்தான் வீரருக்கு ஜெர்சியை பரிசளித்த விராட் கோலி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி, தனது ஜெர்சியில் ஆட்டோகிராப் போட்டு, அதனை பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் ஹரிஸ் ராவுஃப்-க்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47