Kieron pollard
'இந்த வீரர் பொல்லார்டை நினைவு படுத்துகிறார்' - வியக்கும் அனில் கும்ப்ளே
நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் வருகிற 09ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்கான போட்டி அட்டவணை, மைதானங்களை பிசிசிஐ ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், ஐபிஎல் அணிகள் தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. அந்த அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான ஷாருக் கானும் பங்குவகிப்பதால், பஞ்சாப் கிங்ஸ் அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.