Mitchell marsh
அணியின் சமநிலை சிறப்பாக உள்ளது - மிட்செல் மார்ஷ்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மும்பையில் இன்று நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக வார்னர், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல் உள்ளிட்ட வீரர்கள் இந்தியாவுக்கு வந்திருக்கிறார்கள். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஆஸ்திரேலியா அணி ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் எங்கள் அணியின் சமநிலை சிறப்பாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “அணியின் சமநிலை சிறப்பாக உள்ளது. காரணம் பல ஆல்ரவுண்டர்கள் தற்போது அணியில் இருக்கிறார்கள். பல சிறப்பான அணிகளும் கடந்த காலங்களில் பேட்டிங் வரிசையை பலப்படுத்தி இருக்கிறது. இங்கிலாந்து போன்ற அணியில் எட்டாவது இடத்தில் இருக்கும் வீரர் கூட அதிரடியாக விளையாடுவார். இதுபோன்று பல பேட்ஸ்மேன்கள் இருப்பது பெரிய இலக்கை துரத்த ஏதுவாக இருக்கும்.