Advertisement
Advertisement

Ranji trophy 2024

ரஞ்சி கோப்பை 2024: இரட்டை சதமடித்து மிரடிய முஷீர் கான்; வலிமையான நிலையில் மும்பை அணி!
Image Source: Google

ரஞ்சி கோப்பை 2024: இரட்டை சதமடித்து மிரடிய முஷீர் கான்; வலிமையான நிலையில் மும்பை அணி!

By Bharathi Kannan February 24, 2024 • 15:04 PM View: 155

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பானடு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் காலிறுச்சுற்றுக்கு, தமிழ்நாடு, சௌராஷ்டிரா, மும்பை, பரோடா, மத்திய பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, விதர்பா ஆகிய அணிகள் முன்னேறின. அதன்படி மும்பையில் நடைபெற்றுவரும் இரண்டாவது காலிறுதிச்சுற்றில் மும்பை மற்றும் பரோடா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 

இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணியில் பிரித்வி ஷா 33 ரன்களுக்கும், புபென் லல்வானி 19 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய முஷீர் கான் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் அஜிங்கியா ரஹானே, ஷாம்ஸ் முலானி ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

Related Cricket News on Ranji trophy 2024