Smriti mandhana
INDW vs ENGW, 3rd T20I: ஒயிட்வாஷை தவிர்த்தது இந்திய மகளிர் அணி!
ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி அடங்கிய தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இத்தொடரின் மூன்றாவது போட்டி இன்று மும்பையில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் மையா பௌச்சர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீராங்கனையான சோபியா டங்க்லியும் 11 ரன்கள் எடுத்த நிலையில் ரேணுகா சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய அலிஸ் கேப்ஸியும் 7 ரன்களுக்கு நடையைக் கட்டினார்.