Advertisement
Advertisement

South africa cricket

தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் எங்களால் இந்த போட்டியை வெல்ல முடிந்தது - ஐடன் மார்க்ரம்!
Image Source: Google

தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் எங்களால் இந்த போட்டியை வெல்ல முடிந்தது - ஐடன் மார்க்ரம்!

By Bharathi Kannan December 20, 2023 • 13:09 PM View: 124

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது தென் ஆப்பிரிக்கவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்திய இந்திய இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நேற்று செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 46.2 ஓவர்களில் 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து 212 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியானது, 42.3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 215 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

Related Cricket News on South africa cricket