Tnpl
டிஎன்பிஎல் 2021: திருச்சி பந்துவீச்சில் 77 ரன்களில் சுருண்ட நெல்லை!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கிய அமித் சத்விக் 71 ரன்களைச் சேர்த்தார்.