At chepauk
சேப்பாக்கில் இதுதான் தோனியின் கடைசி போட்டியா? - வைரலாகும் சுரேஷ் ரெய்னாவின் பதில்!
சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக ரியான் பராக் 47 ரன்களையும், துருவ் ஜூரெல் 28 ரன்களையும் சேர்த்தனர்.
சிஎஸ்கே அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய சிமர்ஜீத் சிங் 3 விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
Advertisement
Related Cricket News on At chepauk
கிரிக்கெட் உடனுக்குடன்
அதிகம் பார்க்கப்பட்டவை
இன்றைய கிரிக்கெட் கேலரி
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24