Banw vs indw
நடுவர்களை கடுமையாக விமர்சித்த ஹர்மன்ப்ரீத் கவுர்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் அணி அங்கு முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் வென்றது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றதால் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3ஆவது போட்டி இன்று டாக்காவில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 50 ஓவர்களில் 225/4 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக தொடக்க வீராங்கனை சுல்தானா 52 ரன்களும் பர்கனா ஹோய்க் சதமடித்து 7 பவுண்டரியுடன் 107 ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஸ்னே ரனா 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.