Bhuvneshwar kumar
உண்மை தெரியாமல் கற்பனையாக செய்தி வெளியிட வேண்டாம் : வேண்டுகோள் விடுத்த புவி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படாதது சமூக வலைதளங்களில் விவாதபொருளாக மாறியது.
இதையடுத்து சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்றில், புவனேஷ்குமார் டெஸ்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டு, டி20 கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது கடும் விமர்சனங்களைப் பெற்ற நிலையில், நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற போகிறேன் என்ற தகவல் உண்மை கிடையாது. பத்திரிகைகள் தேவையில்லாமல் இப்படி வதந்தி பரப்ப வேண்டாம் என புவனேஷ்வர் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.