Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Delhi capitals

Ricky Ponting: 'It was a tough decision to leave Prithvi out'
Image Source: Google

பிரித்வி ஷா ஸ்பார்க் கொடுக்க தவறி விட்டார் - ரிக்கி பாண்டிங்!

By Bharathi Kannan April 29, 2023 • 11:49 AM View: 170

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. முன்னதாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்துள்ளன. 

அதிலும் குறிப்பாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடர்ந்து 5 தோல்விகளைச் சந்தித்து தற்போது, தொடர்ந்து 2 வெற்றிகளைப் பெற்றுள்ளது. ஆனால் அந்த அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா தொடர்ந்து சொதப்பி வருவது பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரித்வி ஷா ஸ்பார்க் கொடுக்க தவறி விட்டதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். 
    
இதுகுறித்து பேசிய அவர், “நடப்பு சீசனில் 6 போட்டிகள். கடந்த சீசனின் பிற்பாதியில் 6 அல்லது 7 போட்டிகள் என நான் நினைக்கிறேன். அதாவது 12 அல்லது 13 போட்டிகளாக இன்னிங்ஸை ஓப்பன் செய்யும் பிரித்வி ஷா, அரைசதம் பதிவு செய்யவில்லை. எங்களுக்கு டாப் ஆர்டரில் ஸ்பார்க் தேவைப்பட்டது. ஆனால், அவர் அதனை கொடுக்க தவறி விட்டார். அவர் மேட்ச் வின்னர் என்பதை நாங்கள் அறிவோம். அதனால் தான் அவரை அணியில் தக்க வைத்தோம். களத்தில் அவர் குறிப்பிட்ட பந்துகளை எதிர்கொண்டு விட்டால் நாங்கள் 95 சதவீதம் வெற்றி பெறுவோம் என்பதை அறிவோம். இருந்தும் நடப்பு சீசனில் 47 ரன்கள் மட்டுமே அவர் எடுத்துள்ளார். அது போதவே போதாது.

Related Cricket News on Delhi capitals