Eng vs ind
அஸ்வின் அடுத்த போட்டியில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் - விவிஎஸ் லக்ஷ்மன்
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் மழையால் டிராவில் முடிந்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 183 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 278 ரன்கள் அடித்தது.
95 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 303 ரன்கள் அடிக்க, இதையடுத்து 209 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இந்திய அணி, 4ஆம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் அடித்திருக்க, கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணிக்கு வெறும் 157 ரன்கள் தேவை என்ற நிலையில், இந்திய அணி எளிதாக ஜெயித்திருக்க வேண்டிய இந்த போட்டியை மழை கெடுத்தது. கடைசி நாளான நேற்றைய ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டதால் போட்டி டிரா என்று அறிவிக்கப்பட்டது.