Hardik pandya
ரோஹித்திற்கு ஆதரவாக பதிவிட்ட சூர்யகுமார் யாதவ்; மும்பை இந்தியன்ஸில் முற்றும் மோதல்!
ஐபிஎல் 17ஆவது சீசன் தொடங்குவதற்கு முன்பாக இந்த வருடத்தின் இறுதியிலேயே ஐபிஎல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. குறிப்பாக ஏலம் நடப்பதற்கு முன்பாகவே, ஏலத்தை விட தீவிரமான விஷயங்கள் நடைபெற்ற முடிந்துள்ளன. இப்படி நடைபெற்ற எல்லா விஷயங்களுக்கும் மையமாக மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே இருந்து வருகிறது. இந்த அணியை சுற்றி நிறைய விவாதங்கள் தற்பொழுது போய்க்கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிய அணியாக உள்ளே வந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியாவை நேரடியாக அந்த அணி நிர்வாகம் கேப்டன் ஆக்கியது. மேலும் சிறந்த பயிற்சியாளர்கள் மற்றும் சிறந்த வீரர்களை உள்ளடக்கிய குழுவைக் கொண்டு, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் சீசனில் கோப்பையை வென்று அசத்தியது.