Advertisement
Advertisement
Advertisement

In bairstow

மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் அதனை செய்வேன் - அலெக்ஸ் கேரி எச்சரிக்கை
Image Source: Google
Advertisement

மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் அதனை செய்வேன் - அலெக்ஸ் கேரி எச்சரிக்கை!

By Bharathi Kannan July 15, 2023 • 22:21 PM View: 321

ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியால் ரன் அவுட் செய்யப்பட்ட விதம் சர்ச்சையைக் கிளப்பியது. விதிகளுக்கு உட்பட்டே ரன் அவுட் செய்யப்பட்டதால் மூன்றாம் நடுவர் அவுட் என தீர்ப்பளித்தார். இருப்பினும், ஆஸ்திரேலிய அணி விளையாட்டின் மாண்பை பாதிக்கும் வகையில் இங்கிலாந்து வீரரை ரன் அவுட் செய்தாக பலரும் விமர்சித்தனர். 

இங்கிலாந்து ரசிகர்களும் ஆஸ்திரேலிய அணி ஏமாற்றுவதாக அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த விவகாரம் இங்கிலாந்து பிரதமர் விமர்சிக்கும் அளவுக்கு பெரிதானது.  இந்த நிலையில், வாய்ப்பு கிடைத்தால் பேர்ஸ்டோவை ரன் அவுட் செய்தது போல் மீண்டுமொரு ரன் அவுட் செய்வேன் என இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி எச்சரித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

Advertisement

Related Cricket News on In bairstow