In super
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா ஆகியோர் நீக்கப்பட்டு ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் மீண்டும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டனர்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு சாகிப்சாதா ஃபர்ஹான் மற்றும் ஃபகர் ஸமான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸமான் 15 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த சாஹிப்சாதா ஃபர்ஹான் அரைசதம் கடந்து அசத்தினார். அவருடன் இணைந்த சைம் அயுப்பும் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்ய இருவரது பார்ட்னர்ஷிப்பும் 70 ரன்களைக் கடந்தது. அதன்பின் 21 ரன்கள் எடுத்த நிலையில் சைம் அயுப்பும், 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 58 ரன்களுக்கு ஃபர்ஹானும் விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on In super
-
ஆசிய கோப்பை 2025: இந்தியாவுக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்த பாகிஸ்தான்!
இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சிஎஸ்கேவின் ஆல் டைம் லெவனைத் தேர்வு செய்த சுரேஷ் ரெய்னா; முக்கிய வீரர்களுக்கு இடமில்லை!
சிஎஸ்கேவின் ஆல் டைம் லெவனை தேர்வு செய்த சுரேஷ் ரெய்னா, அதில் டுவைன் பிராவோ மற்றும் அம்பதி ராயுடு போன்ற மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு வழக்கவில்லை. ...
-
அஸ்வின் ஒரு சுழற்பந்துவீச்சு விஞ்ஞானி - மாண்டி பனேசர் பாராட்டு!
ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு, முன்னாள் இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசர் பாராட்டு தெரிவித்துள்ளார். ...
-
GSL 2025: ராங்பூர் ரைடர்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது கயானா அமேசன் வாரியர்ஸ்!
ராங்பூர் ரைடர்ஸ் அணிக்கு எதிரான குளோபல் சூப்பர் லீக் இறுதிப்போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. ...
-
டிஎன்பிஎல் 2025: விஜய் ஷங்கர் அபாரம்; வெற்றியை தொடரும் சூப்பர் கில்லீஸ்!
மதுரை பாந்தர்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஒரே ஆட்டத்தில் மூன்று சூப்பர் ஓவர்கள்: வரலாற்றில் இடம்பிடித்த நெதர்லாந்து - நேபாள் போட்டி!
நேபாள் அணிக்கு எதிரான டி20 போட்டியில் நெதர்லாந்து அணி மூன்றாவது சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஸ்லோ ஓவர் ரேட்: லக்னோ அணி கேப்டன், வீரர்களுக்கு அபராதம்!
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக லக்னோ அணி கேப்டன் மற்றும் வீரர்களுக்கு பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது. ...
-
‘விரைவில் திரும்பி வருவேன்’ - சிஎஸ்கேவிற்கு நன்றி தெரிவித்த டெவால்ட் பிரீவிஸ்!
என் மீது நம்பிக்கை வைத்து, நான் விரும்பியதைச் செய்ய வாய்ப்பளித்த சிஎஸ்கே நிர்வாத்திற்கு நன்றி என தென் ஆப்பிரிக்காவின் அதிரடி வீரர் டெவால்ட் பிரீவிஸ் தெரிவித்துள்ளார். ...
-
பிஎஸ்எல் தொடரின் போது ஏற்பட்ட அனுபவம் குறித்து மனம் திறந்த குசால் மெண்டிஸ்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் போது தனக்கு நடந்த பயங்கரமான அனுபவம் குறித்து இலங்கை வீரர் குசால் மெண்டிஸ் மனம் திறந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: மாற்று வீரர்களை அறிவித்த பஞ்சாப், குஜராத், லக்னோ!
ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாடாத வீரர்களுக்கான மாற்று வீரர்களை பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று அறிவித்துள்ளன. ...
-
மே 17 முதல் மீண்டும் தொடங்கும் பிஎஸ்எல் 2025 தொடர்; மொஹ்சின் நக்வி அறிவிப்பு!
போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகளை மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாக பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி அறிவித்துள்ளார். ...
-
தானும் மற்ற வெளிநாட்டு வீரர்களும் நிம்மதியாக உணர்கிறோம் - ரிஷாத் ஹொசைன்!
மோசமான சூழ்நிலைக்கு மத்தியில் துபாயை அடைந்த பிறகு, தானும் மற்ற வெளிநாட்டு வீரர்களும் நிம்மதியாக இருப்பதாக வங்கதேச அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரிஷாத் ஹொசைன் தெரிவித்துள்ளார். ...
-
ரிஷப் பந்த் ஆட்டத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை - சஞ்சய் பங்கர்!
50 ஓவர் மற்றும் டி20 கிரிக்கெட் என இரண்டு வடிவங்களிலும் ரிஷப் பந்த் ஆட்டத்தை இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ஓய்வு முடிவு குறித்து மனம் திறந்த எம் எஸ் தோனி!
ஐபிஎல் தொடர் முடிந்த, பின்னர் என் உடல் இந்த வகையான அழுத்தத்தைத் தாங்க முடியுமா என்று பார்க்க அடுத்த 6-8 மாதங்கள் நான் உழைக்க வேண்டும் என்று சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47