Ind vs pak
டி20 உலகக்கோப்பஒ: 14 ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்த மிஸ்பா உல் ஹக்!
கடந்த 2007ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க நாட்டில் முதல்முறையாக ஐசிசி, டி20 உலகக் கோப்பை தொடரை நடத்தியது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற அந்த முக்கியமான இறுதிப் போட்டியில் இந்திய அணி இறுதியாக 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்று முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
14 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்த போட்டியில் தோனி தலைமையிலான இளம் இந்திய அணி அந்த தொடர் முழுவதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப் போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருப்பினும் முக்கியமான அந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு தலைவலியை கொடுத்தார்.