Prithvi shaw
தொடர்ந்து புறக்கணிக்கப்படும் பிரித்வி ஷா; ட்விட்டரில் கொந்தளிக்கும் ரசிகர்கள்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு நியூசிலாந்து செல்லும் இந்திய கிரிக்கெட் அணி, அங்கு மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. நவம்பர் 18ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர், நவம்பர் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், நியூசிலாந்து அணியுடனான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்துள்ளது.
இதில் ரோஹித் சர்மா, விராட் கோலி என சீனியர் வீரர்கள் பலருக்கு நியூசிலாந்து தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ஹர்திக் பாண்டியா டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதிரடி வீரர் ரிஷப் பந்த் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.