Tamil cricket news
இந்த முறை தென் ஆப்பிரிக்கா கணிக்க முடியாத ஒரு அணியாக இருக்கும் - ஜாகீர் கான்!
இந்தியாவில் நாளை தொடங்க இருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை எடுத்துக் கொண்டால், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகள் மட்டுமே உறுதியாக அரைஇறுதிக்கு தகுதி பெறும் என்று பலரால் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மூன்று அணிகள் தவிர்த்து கிரிக்கெட் மட்டத்தில் மற்ற அணிகள் பற்றிய பேச்சுகள் பெரிய அளவில் ஏதும் கிடையாது. இதற்கு ஏற்றபடி இந்த மூன்று அணிகளில் செயல்பாடும் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை அவர்கள் தொடர்ச்சியாக 5 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச் சிறப்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இருந்து வருகிறார்கள். அவர்களது தாக்குதல் பாணி கிரிக்கெட் உலகம் முழுவதும் தனி ரசிகர்களை உருவாக்கி இருக்கிறது. இன்னொரு பக்கத்தில் ஆஸ்திரேலியா அணி உலகக்கோப்பை தொடர் என்றால் எப்பொழுதும் மிகச் சிறப்பாக செயல்படும் ஒரு அணியாக இருக்கிறது.