Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Tamil cricket news

மீண்டும் ஃபினிஷர் என்பதை நிரூபித்த ரிங்கு சிங்; வைரலாகும் காணொளி!
Image Source: Google

மீண்டும் ஃபினிஷர் என்பதை நிரூபித்த ரிங்கு சிங்; வைரலாகும் காணொளி!

By Bharathi Kannan October 03, 2023 • 12:11 PM View: 370

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி காலிறுதி சுற்றில் நேபாள் அணிக்கு எதிராக 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறது. இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர் இடது கை இளம் வீரர் ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி 49 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார். 

இளம் வயதில் பல நாடுகள் விளையாடும் தொடரில் சதம் அடித்த இந்திய வீரர் என்கின்ற சாதனையை படைத்தார். பேட்டிங் வரிசையில் இவருக்கு அடுத்து வந்த ருதுராஜ், திலக் வர்மா, ஜித்தேஷ் சர்மா என யாரும் சரியாக விளையாடவில்லை. சிவம் துபே 19 பந்துகளில் 25 ரன்கள்தான் இறுதி நேரத்தில் எடுத்தார். இந்த நிலையில் கடைசி ஓவரை முழுமையாக எடுத்த ரிங்கு சிங் முதல் பந்தை பவுண்டரிக்கும், இரண்டாவது பந்தை சிக்ஸருக்கும், மூன்றாவது பந்தை பவுண்டரிக்கும் அனுப்பினார். இதற்கு அடுத்து நான்காவது பந்தில் ஒரு ரன் கிடைத்தது.

Related Cricket News on Tamil cricket news